கவிதைகளல்லாதவை

கவிதைகளென்று பெயரிடப்பட்ட
வார்த்தைகளின் குவியலொன்று
சிறகுகள் முழைத்து
மலையுச்சியை நோக்கி
பறந்து சென்றதையறிந்து
கவலைப்படும் நீங்கள்

சிறகுகளிலிருந்து உதிர்ந்த
இறகுகள் சேகரித்தபடி
மலையுச்சியை தாண்டி அவள்
சென்று கொண்டிருப்பதை
அறியாமலிருத்தல் நலம்.

                      


0 comments: