ரத்தவாடை..




கண்மூடினால் 
அவன் சின்னாபின்னமாய் 
சிதறியோடிய  காட்சிகள் விரிவதைக்கண்டு 
பயத்தில் ஓடி ஒளிகிறது தூக்கம்,
 
எங்கு எதை நோக்கினும் 
சிவப்பு வர்ணமாகவே  தெரிகிறது 
என் கண்ணுக்கு, 

அவ்விடம் தாண்டிச்செல்லும் 
போதெல்லாம் அவனின்  சிரித்த 
முகமே முன் நிற்கிறது 

டெட்டாலுக்கும்  பணியாமல் 
பரவி நிற்கிறது தேங்கி நின்ற
ரத்தத்தின் வீச்சம்,

"எப்படி இருக்கார், 
எப்போது கண்முளிப்பார் 
ஏதாவது பேசினாரா 
எப்போ பேசுவார்
எனக்கு அவரை பாக்கணும்" 
என்றவர் மனைவி அடக்கமுடியா 
அழுகைச்  சத்ததுடன் எங்களிடம் 
கேட்க்கும் போதெல்லாம் 

எதைப்பற்றியும் 
யோசிக்காமல் யோசிக்கிறேன் 
பத்து நொடி முன்பு அந்த விபத்து நடந்து 
அதில் சிக்கி 
நானே இறந்து போயிருக்கலாம் என்று .