மூன்றாம் ஜாமம்.


நான் உண்டு என் வேலை உண்டு என்று இருந்த என்னை தொடர்பதிவு என்று உள்ளே இழுத்துவிட்ட திரு வைகை அவர்களுக்கு கொலைவெறியுடன் ஒரு வணக்கத்தை (வணக்கமா நன்றியா) தெரிவித்துவிட்டு வாங்க போலாம்.. 

யோவ்.. யோவ்.. எங்கையா போறீங்க நான் சொனது பதிவ படிக்க போலாமின்னு.. 




1. விரும்பும் 3 விஷயங்கள்


அ. தூறலுடன் கூடிய மாலை நேர கடற்கரை 
ஆ. ஜன்னலோர கடைசி இருக்கை பயணம்  
இ.  அடைமழை தேநீர் 




2. விரும்பாத 3 விஷயங்கள்

அ.  என்னிடம் கேள்விகள் கேட்ப்பது (ஆனா நான் கேட்ப்பேன்)
ஆ. தூக்கம் கலைப்பது 
இ.  அதிக சத்தம் 


3. பயப்படும் 3 விஷயங்கள்

அ. என்றாவது ஒரு நாள் ஜோதி கதையை "ஜோதி" படிப்பாள் என்று நினைக்கும் போது 
ஆ. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பைக் ஓட்டும் போது மட்டும் 
இ.  தற்போதைய இயந்திர வாழ்க்கை. 


4. புரியாத 3 விஷயங்கள்

அ.  என்னவள் கண்கள் பேசும் மௌன மொழி 
ஆ. பள்ளிக்காலம் முதல் கல்லூரிக்காலம் வரை கணக்குப்பாடம்   
இ.  என்னையும் ஒரு பதிவர் என்று நம்புவது  


5. உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்

அ.  ஒடஞ்ச  கீபோர்ட்
ஆ. ஓடைய போற மௌஸ் 
இ.  அவள் நினைவுகளை நித்தம் பதிவு செய்யும் டைரி. 


6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்

அ. மலையாள நடிகர் Suraj Venjaramoodu ன் நகைச்சுவைகள் 
ஆ. கும்மி குரூப் மக்களின் கமெண்ட்கள் மற்றும் பதிவுகள் 
இ. கல்லூரிகால ஆட்டோகிராப் புக்.

7. இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்

அ. இதை டைப் செய்து கொண்டிருக்கிறேன் 
ஆ.
இதை டைப் செய்து கொண்டிருக்கிறேன்  
இ. இதை டைப் 
செய்து கொண்டிருக்கிறேன்


10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்

அ. பொறுமை 
ஆ. சமையல் (வருங்காலத்தில உதவுமில்லையா)
இ. செய்யிற வேலைய ஒழுங்கா செய்ய 


11. பிடித்த 3 உணவு விஷயங்கள்

அ. மீன் குழம்பு (அம்மா சமைத்தது மட்டும்)
ஆ. காரக்கொழம்பு
இ. கேரளா உணவுவகைகள் எல்லாமே. 


12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்

அ. மரணம் மற்றும் துயர செய்திகள் 
ஆ. அட்வைஸ் 
இ. அள்ளக்கைகளின் அலப்பறைகள் 


13. அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்

அ. காதலின் தீபம் ஓன்று (தம்பிக்கு எந்த ஊரு)
ஆ. வெண்மதியே வெண்மதியே (மின்னலே).
இ. பூவே பூவே பாலப்பூவே (தேவதூதன் -  மலையாளம்)


14. பிடித்த 3 படங்கள்

அ. மின்னலே 
ஆ. பிரம்மாரம் (மலையாளம்)
இ. கம்யம் (தெலுகு)


15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்

அ. உண்ண உணவு 
ஆ. உடுத்த உடை 
இ.  இருக்க இடம் 
       (பள்ளிக்காலத்தில படிச்சதெல்லாம் மறக்கமாட்டமில்ல)


16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேர்


17. இதை எழுத அழைக்கப்போகும் மேலும் 3 பேர்



18. இதை எழுத அழைக்கப்போகும் மேலும் 3 பேர்



19. இதை எழுத அழைக்கப்போகும் மேலும் 3 பேர்

அ. பனங்காட்டு நரி  (இலக்கியம் மட்டும் வேனாஞ்சாமி )
ஆ. மாலுமி (தண்ணியிலிருந்து கொஞ்சம் வெளிய வாங்கையா)

இ. சுற்றுலா விரும்பி - அருண் 



இங்கே கூப்பிட்டிருக்கிற அத்தன பேர் பிளாகும் தூசு படிஞ்சு போய் கிடக்கு.. இதில ஒரு சிலருக்கு ப்ளாக் ன்னு ஒண்ணு இருக்கிறதே மறந்து போயிருக்கும்.. அதனால அண்ணன் சொன்னத மறுக்காம ஒழுங்கு மரியாதையா இந்த தொடர் பதிவ எழுதுங்க.. இல்லன்னா பயங்கரமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.. இவ்வளவு சொல்லியும் எழுதாம போனா நான் மறுபடியும் கதை எழுத ஆரம்பிச்சிருவேன் சொல்லிட்டேன்..