ஜோதி - XI


  கதையின் முந்தைய பாகங்கள்.. 

 
 

ஜோதி வந்து ஒரு வாரம் ஆச்சு.இப்ப பரவாயில்லை அவளுக்கு மகேஷை நல்லா அடையாளம் தெரிஞ்சிடுச்சு. ஜெகனோட ரொம்ப அச்சாட் ஆயிட்டாள். மகேஷை அடையாளம் தெரிஞ்சிகிட்டாளான்னு குழப்பமா இருக்கலாம் உங்களுக்குக்கு...

ஜோதியை நான் ஆஸ்பிட்டல்ல பார்த்து ரொம்ப அதிர்ச்சியானேன். அவளுக்கு என்னை அடையாளமே தெரியலை. அங்கிருந்த சீஃப் டாக்டர்கிட்ட விசாரிச்சப்ப “நான் ஜோதியை 6 மாசம் முன்னாடி ஒருநாள் ரோட்டில் அடிபட்டு கிடக்கிறதை பார்த்து இங்க கொண்டு வந்தேன். 2 மாசம் கழிச்சு நினைவு திரும்பினாலும் அவளுக்கு அடிப்பட்டதில பழசெல்லாம் மறந்துருச்சு. அவங்க பேரை தவிர எதுவும் ஞாபகம் இல்ல. செலக்டிவ் அம்னீஷியா. ஆனா நினைவு எப்ப வேணும்னாலும் திரும்பலாம். விளம்பரம் கொடுத்தோம். இவங்களை தேடி யாரும் வரலை. இன்னும் ட்ரீட்மெண்ட் முடியலை அதான் இங்க வச்சிருக்கோம்” அப்படின்னார். அப்புறம் மகேஷை வர வச்சேன். மகேசை அவளுக்கு ஏதோ நெருங்கின உறவு மாதிரி இருக்கறதா சொன்னாள். நாங்க அவளை சென்னைக்கு கூட்டிட்டு வந்துட்டோம்.

அப்புறம் எனக்கு தோணுச்சு ஜோதி ஜெகன் மேல ரொம்ப பாசம் வச்சிருக்கா. அப்ப அவன் கூட பழக விட்டா நினைவு திரும்பலாம். நான் சொன்ன யோசனையை மகேஷ் ஏத்துகிட்டார். இந்த ஒரு வாரத்தில் நல்ல இம்ப்ரூவ்மெண்ட். அவ மகேஷை கணவனா ஏத்துகிற நிலைக்கு வந்துட்டா. ஜெகனை தன் குழந்தையாவே நினைச்சு பழக ஆரம்பிச்சிட்டா. ஜெகனும் தன் அம்மாவை கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டு வரான்.

என்ன கொடுமைன்னா என்னை பார்த்தா எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குன்னு இப்பத்தான் சொல்றா...ம்ஹூம்.

-----------------------------------------------
 -----------------------------------------------

அந்த மரத்தடியில் ஸ்வப்னா என் முன் நின்றிருந்தாள்.

இந்த ஒரு வாரத்தில் இவளை சமாளிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. விட்டா எம்டிக்கிட்ட மாட்டியே விட்ருவா போல. நேத்து அப்படித்தான் அவ வீட்ல அன்பில்லாத அப்பாவுக்கு-னு லட்டர் எழுதி வச்சுட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்துட்டா. அவளை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. நானே ஏற்கனவே பல குழப்பத்தில இருந்தேன். எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. இவகிட்ட பேசி காதல் இல்லைன்னு புரிய வைக்கனும்னு வரச் சொன்னேன்.

“ஸ்வப்னா. நீ என் மேல வச்ச அன்புக்கு ரொம்ப நன்றி. எனக்கு உன்னை பிடிக்கும். உன்னோட இன்னசென்ஸ், குழந்தைத்தனம் எல்லாம் புடிக்கும். ஆனா....உன்னை நான் லவ் பண்ணலை. அப்படி ஒரு எண்ணமே எனக்கு வரலை. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ... உன் மனசுக்கு புடிச்ச மாதிரி கணவன் கிடைப்பான். ஆனா அது நா இல்ல...உன் அப்பா உன்மேல ரொம்ப பாசம் வச்சிருக்கார். நான் அவர் கூட பழகினது கொஞ்ச நேரம்தான் ஆனா அவர் தன்னைப் பத்தி பேசுனது விட உன்னை பத்திதான் அதிகமா பேசுவார்.”

“ஜெயந்த் உங்களுக்கு தெரியாது எங்கப்பா சின்ன வயசில இருந்தே என்னை சரியா கவனிக்க மாட்டார். அவர் அன்பில்லாதவர். அது எனக்கு புடிக்காது. அப்படியே படிப்படியா வளர்ந்து எனக்கு அவர் மேல கோவம்தான் வருது. அவர் பண்ணுறது எதுவுமே எனக்கு புடிக்காது. இப்ப கூட எனக்கு மாப்பிள்ளை பார்த்துருக்கார். அதான் நேத்து கூட நான் உங்க வீட்டுக்கு வந்துட்டேன்”

“தட்ஸ் இட்.. உனக்கு என்னை புடிக்கும்கிறதை விட உங்கப்பா விட்டு விலகி வாணும்னு நினைக்கிற. இல்ல ஸ்வப்னா. உங்கப்பா உன் கூட இல்லங்கிறதுதானே உன் குறை. ஆனா அவர் யாருக்காக அப்படி உழைக்கிறார், உனக்காகதானே. தனக்குன்னு எந்த சுகங்களும் தேடிக்காம உனக்காகவே வாழறவரையா அன்பில்லாதவர்னு சொல்றே. தப்பு ரொம்ப தப்பு. உன் அப்பா கூட பேசு மனசு விட்டு பேசு. அவர் அன்பு உனக்கு புரியும். உனக்கும் அவர் மேல அன்பு வரும்.”

“ஸ்வப்னா நான் உனக்கு ஒரு நல்ல நண்பனா என்னைக்கும் இருப்பேன். ஆனா காதலனாவோ கணவனோ என்னால முடியாது சாரி...”

ஸ்வப்னா அமைதியாக இருந்தாள். பின் ஏதோ முடிவோடு கிளம்பினாள்.

“தேங்க்ஸ் ஜெயந்த். எனக்கு எங்கப்பா மேல ரொம்ப அன்பு அதிகம் அதனாலதானே அவர் கூட இல்லங்கிறதுக்கு கோபப்படுறேன். அது எனக்கு இப்ப புரியுது. ரொம்ப நன்றி............ நீங்க என்னை காதலிக்கலன்னு சொன்னது எனக்கு வருத்தம்தான் ஆனாலும் ஒரு நல்ல தோழியா என்னை ஏத்துகிட்டீங்களே அது போதும்...”

-----------------------------------------------
-----------------------------------------------

எப்படியோ இந்த ஸ்வப்னா பிரச்சினை ஒரு வழியா முடிஞ்சது. ஜோதி கிடைக்காதது வருத்தம்தான், இருந்தாலும் இப்ப அவ கணவன் கூட சேர்ந்துட்டா அது எனக்கு போதும். இந்த கார்த்திக் - அபிநயா விசயம் இருக்கு... நாளைக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ண எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. எல்லாம் நல்லபடியா நடக்கணும். கோகுல் அப்பப்ப என்னை சந்தேகமா பார்க்கிற மாதிரியே இருக்கு ஏதாவது கண்டுபுடிச்சிட்டானா?

யோசனையுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது ஃபோன் ஒலித்தது.

“ஹலோ”

“ஜெயந்த் நான் அம்மா பேசறண்டா”

“சொல்லும்மா எப்படியிருக்க”

“எல்லோரும் நல்லா இருக்கோம்டா. நீதான் எங்க ஆசையை நிறைவேத்த மாட்ற. எப்பத்தான் உனக்கு கல்யாணம் ஆகப்போகுதோ.”

நான் யோசித்தேன். சிறிது மவுனத்திற்கு ”சரிம்மா.. உன் இஷ்டம்போல பொண்ணு பாரு. எனக்கு சம்மதம்”

“அப்படியாடா. டேய்..ரொம்ப சந்தோசம்டா. ரொம்ப சந்தோசம்...வச்சிருடறண்டா” அம்மா சந்தோசத்துடன் ஃபோனை வைத்தாள்.

நான் சிரித்துக் கொண்டே வீட்டுக்குள் சென்றேன். குளித்து விட்டு வெளியே வந்தபோது மாடியில் ஏதோ சத்தம் கேட்டது. மேலே ஏறிச் சென்ற போது....

ஜெகன் ஜோதியிடம் ஒண்டியிருக்க ஜோதி அவனை அணைத்தடி படி இருந்தாள். மகேஷ் அருகில் நின்றிருந்தார். அவர்களுக்கு அருகில் “என் குழந்தை எனக்கு வேணுங்க” என ஒருவர் சற்று கோபத்தோடு  கூறிக் கொண்டிருந்தார். நான் அருகில் சென்று கேட்டேன்.

”மகேஷ் இது...யாரு”

அவர் தயக்கத்துடன் சொன்னார், “ஜெயந்த்... இவர்... வெங்கடேஷ். ஷீலாவோட கணவர்”

தொடரும்... 

ஜோதி - X

  கதையின் முந்தைய பாகங்கள்.. 




சென்னை. அழுது கொண்டிருந்த ஜெகனை சமாதானப்படுத்தி தூங்க வைத்தேன். அவன் அம்மாவிற்காக ஏங்குகிறான். நான் என்ன செய்வது?

எதேட்சையாய் பஸ்ஸில் கார்த்திக்-அபிநயாவை சந்தித்ததும் நான் அவர்களை தேடியது அவர்கள் பேசியதை கேட்டதை சொன்னவுடன் என்னிடம் உதவி கேட்டது எனக்கு வியப்பாகத் தான் இருந்தது. இருந்தாலும் என் மனது அவர்களுக்கு உதவச் சொன்னது. அருணிடம் பேசி அவன் உதவியால் இங்கே தெரிந்தவர்கள் வீட்டில் தங்க வைத்தோம். இன்னும் இரண்டொரு நாட்களில் அவர்களுக்கு திருமணம் செய்ய உதவ வேண்டும். பாஸுக்கு இது தெரிந்தால் என்ன ஆகப் போகிறதோ?

அன்று மகேஷேப் பார்க்க அவர் வீட்டுக்குச் சென்றேன் அவர் பாத்ரூமில் இருந்தார் போல அவரை கூப்பிட்டவுடன் அங்கே உட்காரச் சொன்னார். அங்கேதான் நான் எதேட்சையாய் அந்த டேப்ரிக்கார்டரில் பாஸ் பண்ணிய நிலையில் இருந்த ஒலிநாடாவை போட்டேன். முதலில் ஒரு பெண் பாடுவது கேட்டது. இந்தக் குரல் இந்தக் குரல் ஜோதியினுடையதல்லாவா.... பாடல் முடிந்தவுடன் நீண்ட நேரம் அமைதியாக இருந்தது பிறகு இரண்டு பேர் சண்டை போட்டுக் கொள்வது ஒலித்தது.

ஒலிநாடாவை முழுவதுமாக கேட்டேன். கடைசியாக ஒலித்தது நினைவுக்கு வந்தது, 

“என்னை அடிங்க, இன்னும் எவ்வளவு வேணும்னாலும் அடிங்க, ஆனா நான் அவனை பார்க்க போவேன்! போவேன்! போவேன்!”
“புருஷன்காரன் இவ்வளவு சொல்றேன் கேட்காம போவேன்னு சொல்றியா உன்னை என்ன பண்றேன் பார்” அத்துடன் டேப் முடிந்து போயிருந்தது.

முதன் முறையாக எனக்கு சந்தேகம் வந்தது... மகேஷால் ஜோதிக்கு ஏதாவது ஆபத்து வந்திருக்குமோ?

---------------------------------------
Dialogue - 1
 ---------------------------------------
“ஷீலாவை தேடி ஒருமுறை போலீஸ் வந்தது ஏதோ என்கொயரின்னு அதிலிருந்து ஷீலாவை எல்லோரும் தப்பா நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க. நானும் எங்கம்மாவும் கூட. இதனால் ஜோதியை அவளை பார்க்க போக வேண்டாம்னு சொன்னோம். ஆனால் ஜெகன் கூட ரொம்ப அட்டாச் ஆயிட்ட அவனை பார்க்க போவேன் போவேன் சண்டை போட்டா ஒரு நாள். அன்னைக்கு நான் ஷீலாவை பார்த்து ரொம்ப கடுமையா திட்டினேன். அவளால எங்க வாழ்க்கை பாதிக்கப்படுறதா. அதற்கடுத்த நாள் ஷீலா இந்த ஊரை விட்டு போயிட்டா, அப்புறம் ஜோதியும்... ஒரு விதத்தில் நான் அதுக்கு காரணம்”

மகேஷ் திட்டியதைதான் ஷீலா மறைத்திருக்கிறாள் என எனக்கு புரிந்தது. அப்படியானால் ஜோதி இப்போ எங்கே??

---------------------------------------
“இடியட்.. நான் சொன்ன வேலையை செய்யறதை விட உனக்கென்ன பெர்சனல் வொர்க். சே உன்னை மாதிரி ஆளுங்களை வேலைக்கு வெச்சுகிட்ட என்ன பண்ணுறது. நீயெல்லாம் எதுக்கு வேலைக்கு வர?”

ஏண்டா வேலைக்கு வந்தோம்கிற அளவுக்கு திட்டினார் தீனதயாள். ஆபிஸ் வேலைக்கு கூட இப்படி திட்டு வாங்கியதில்லை பாஸிடம். இதுக்கே இப்படி திட்டுறார்னா இவரு பொண்ணையும் அவ காதலையும் ஒளிச்சு வைச்சிருக்கிறது தெரிஞ்சா என்னாகுமோ??

“இந்தா பிடி இந்த பைல்களை மதுரையில் இருக்கிற பிராஞ்ச் மேனேஜர் ரகுன்னு ஒருத்தர் இருப்பார் அவர்கிட்ட கொடுத்துட்டு வா. இதையாவது உருப்படியா செய்”

பெருமூச்சுடன் எம்டி அறையிலிருந்து வெளியே வந்தேன். ஸ்வப்னா நின்றிருந்தாள். வேகமாக என்னருகே வந்து “ஜெயந்த் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள்.
“அது வந்து.. ஸ்வப்னா. எம்டி அர்ஜண்டா மதுரைக்கு போகச் சொன்னார். நான் போய் வந்ததும் பேசலாம்” “இல்ல ஜெயந்த்...”  அவள் தயக்கத்தை பொருட்படுத்தாமல் கிளம்பினேன்.
---------------------------------------
Dialogue - 2
---------------------------------------
மதுரை. இங்கே என்ன நடக்கப்போகிறதோ? நல்லவேளை ஜெகனை அருணிடமும் அவன் மனைவியிடமும் விட்டு வந்தாச்சு. மகேஷ் ஏனோ ஜெகனை பார்த்து முதலில் கோபப்பட்டார். பிறகு சமாதானமாகி விட்டார். சரி நாம வந்த வேலையை பார்ப்போம்.

அந்த ரகுவின் வீட்டை தேடிப் போனேன். அவர் வீடு பூட்டியிருந்தது. குழப்பத்துடன் பக்கத்து வீட்டுச் சென்று விசாரிக்கலாமெனச் சென்றேன்.

அது ஒரு பழங்காலத்து வீடு. அந்த வீடு லேசாக திறந்திருந்தது. உள்ளே சில ஃபோட்டோக்களை பார்த்தேன். ஒரு ஃபோட்டோவில் நண்பர்களோ சகோதரர்களோ தெரியவில்லை...இருவர் சந்தோசமாக தோள்மேல் கைபோட்டபடி இருந்தார்கள். ஒரு ஃபோட்டோவில் ஒருவர் டாக்டர் போல நின்றிருந்தார். மற்ற ஃபோட்டோக்களை பார்க்க முயற்சித்த போது ஒரு பெண்மணி வந்தார். “யார் வேணுங்க?”
“இல்ல இங்க ரகுன்னு பக்கத்து வீட்டில”
“ஓ அவரா.. அவரு மனைவிக்கு ஹார்ட் அட்டாக். இங்கதான் பக்கத்தில் ஹாஸ்பிடல் ஒன்னு இருக்கு அதில் சேர்த்திருக்காங்க”

அடடா.. எங்க போனாலும் ஏதாவது பிரச்சினை. இப்ப என்ன பண்ணுறது? விசயம் கேள்விப்பட்டும் போகலன்னா நல்லா இருக்காது. சும்மா பார்த்துட்டாவது போவோம். முகவரி விசாரித்துக் கொண்டு கிளம்பினேன்.

---------------------------------------
Dialogue - 3
---------------------------------------
ரகுவை சந்தித்தேன். நல்லவேளை அவர் மனைவிக்கு மைல்ட் அட்டாக்தானாம். அவரை சந்தித்து விவரம் சொல்லி மன்னிப்பு கேட்டு விட்டு, ஃபைல்களை தந்துவிட்டு கிளம்பினேன். நல்லவேளை இதை ஒழுங்காக முடித்து விட்டோம் என மகிழ்ச்சியோடு கிளம்பினேன். வராண்டாவில் நடந்து  வெளியே செல்லும்போது அந்த பாடல் என் காதில் கேட்டது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்... நான் காதல் வலியை அனுபவிக்கும்போது அடிக்கடி கேட்பேன்....

“வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு வானம்தாம் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் ...................”

பாடலை ஒரு அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தது. யாரோ எஃப்எம் கேட்கிறார்களோ. மெதுவாக நடந்தபடி கேட்டுக் கொண்டே சென்று கொண்டிருந்தேன். அந்த அறையை கடந்த போது ஒரு குரல் கேட்டது.

“சிஸ்டர் இந்த ஹாஸ்பிட்டல்லயே இருக்கிற என்னவோ போல் இருக்கு எனக்கு எப்ப சரியாகுமோ நான் இன்னைக்கு வெளியே போலாமா?”

அந்த குரல் என்னை திடுக்கிட வைத்தது. அதிர்ச்சியுடன் அறைக்குள் பார்த்தேன். அது....ஜோதி!

தொடரும்... 

ஜோதி - I X

 கதையின் முந்தைய பாகங்கள்..

 
 

நிறைய நடந்துவிட்டது. எதையும் என்னால் உடனே ஜீரணிக்கக் கூட முடியவில்லை. ஷீலா எனக்கு ரொம்ப நெருக்கமான தோழியாக இல்லாமல் இருந்தபோதும், அவள் இறந்து போனது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவள் வாழ்க்கை ரகசியங்கள் நிறைந்ததாகவே எனக்கு இருந்தது. ஆனால் அவள் தைரியமாக இந்த உலகில் வாழ்ந்தாள். தன் இறப்பு கூட மற்றவர்களுக்கு பிரச்சினை தரக் கூடாது என்பதாலோ அவள் உடலைக் கூட உடல்தானம் செய்திருந்தாள்.

அவள் மகனுக்கு கார்டியனாக என்னை சொல்லி எழுதியிருக்கிறாள் சாகும் முன்...அவள் கொடுத்த பெரிய பொறுப்பாக அவள் மகன் ஜெகன் இப்போது என்னிடம்! கோகுலை சந்தித்து விவரங்கள் சொன்ன போது பயங்கரமாக திட்டீனான். பிரச்சினைகளை ஏன் இழுத்து விட்டுக் கொள்கிறாய் என்றான். கோயம்புத்தூருக்கு என்னை வரச் சொன்னான். நான் அவனிடம் ஜெகன் இருப்பதால் வரமுடியாது சென்னை செல்கிறேன் என்றேன். பாஸ் திட்டினால் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பினேன்.
------------------------------------------

அந்த இரவு நேரத்தில் பேருந்து அமைதியாக சென்று கொண்டிருந்தது, ஆனால் என் மனம் அமைதியாக இல்லை. அடுத்து என்ன செய்வது? ஜெகனை ஒரு நல்ல ஆர்ஃபனேஜில் சேர்க்க வேண்டும். ஜோதி எங்கே என கடைசி வரை தெரியவில்லை. சென்னையில் என்ன ஆகப் போகிறதோ?! 

திடீரென யாரோ விசும்பும் சத்தம் கேட்டது. பஸ்ஸில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். உன்னிப்பாக கவனித்த போது முன் சீட்டிலிருந்து சத்தம் வந்தது. ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். நன்றாக கவனித்தபோதுதான் தெரிந்தது.... அது ஸ்வப்னாவின் அப்பா.
 ------------------------------------


       ஃபிளாஷ்பேக் - 5           
       “ஆகாஷ் இங்க வாடா இங்க வா...வா...” பயங்கரமாக கத்தினான் கணேஷ்.


“கணேஷ் அமைதியா இருடா...”


“இல்ல நான் என் தம்பியை பார்க்கணும் விடு என்னை விடு...”


“நர்ஸ் அந்த இன்ஜெக்சனை எடுங்க”


“ஆ..நான் என் தம்பியை...” தூங்கிப் போனான் கணேஷ்.


”முரளி இன்னும் எவ்வளவு நாள் கணேஷ் இப்படியே இருப்பான்”


“தெரியலை குமார் நாங்களும் எவ்வளவோ சிகிச்சை தரோம். பார்ப்போம். ஆனா கணேஷ் இந்த நிலைமைக்கு காரணமான அந்த மாலாவையும் அவங்க அண்ணனையும் சும்மா விடக் கூடாது.”


“அந்த மாலாதான் கல்யாணம் பண்ணிகிட்டு சிங்கப்பூர் போய்ட்டாளே இப்ப என்ன பண்ணுறது?”




------------------------------------
“ஸ்வப்னா சின்னப் பொண்ணா இருந்தப்பவே அவ அம்மா போய்ட்டா. நான் வேற கல்யாணம் பண்ணிக்கல. தனியா ஸ்வபானவை வளர்த்தேன். வேலை விஷயமா அடிக்கடி வெளியூர் போக வேண்டியிருக்கும். இதனால் ஸ்வப்னா கூட அதிக நேரம் இருந்ததில்ல. சின்ன வயசில் இதுக்காக அழுவா. ஆனா வளர வளர அவ எம் மேல ஒரு வித வெறுப்பை வளர்த்துகிட்டா தம்பி. நான் பாசமில்லாதவன். அவமேல பாசமில்லன்னு நினைக்கிறா.....”

ஸ்வப்னாவின் அப்பா சொன்னதை கேட்டு எனக்கு பரிதாபமாக இருந்தது. அவர் என்னிடம் அவர் கவலையை பகிர்ந்து கொண்டார் நான் யாரிடம் சொல்வது...? அவருக்கு என்னால் முடிந்தவரை ஆறுதல் சொன்னேன். ஸ்வப்னா புரிஞ்சுக்குவா என்றேன். அவளின் காதல் கடிதம் நினைவுக்கு வந்தது. “சார் உங்க பிரிவை அவ மறக்கனும்னா அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுங்களேன்” என் யோசனை அவருக்கு பிடித்திருந்தது. ஏற்கனவே அதற்கான ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் சீக்கிரம் அது நடக்கும் என்றார். எனக்கு தொல்லை விட்டா சரி!


------------------------------------
ஒரு செய்தி

-----------------------------------------------
பஸ் இடையில் நின்றது. சாப்பிட சிலர் இறங்கினார். ஜெகனை அழைத்துச் சென்று அவனுக்கு ரொட்டியும் பாலும் சாப்பிடக் கொடுத்தேன். பஸ்ஸில் உட்கார்ந்த பின் ஜன்னல் வழியாக கவனித்த போது ஒரு ஜோடி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு பயந்து பயந்து பஸ்ஸுக்குள் ஏறுவதை கவனித்தேன். அவர்கள் பஸ்ஸில் ஏறி பின் இருக்கை பக்கமாகச் சென்றார்கள். வெளிச்சத்தில் நன்றாக கவனித்தபோதுதான் தெரிந்தது...அது கார்த்திக் - அபிநயா!...

தொடரும்...

ஜோதி - VIII

கதையின் முந்தைய பாகங்கள்..


 

குழப்பம் குழப்பம் மேலும் குழப்பம்! ஜோதி இங்கே ஆறு மாதம் முன் வந்திருக்கிறாள். பிறகு எங்கேயோ போயிருக்கிறாள். அவளை இங்கே அழைத்து வந்தது யார்? கூட்டிச் சென்றது யார்? எதுவும் தெரியவில்லை. மகேஷுக்கு ஃபோன் செய்து தகவல்களை சொன்னேன். அவர் ஆச்சரியமானார். உடனே வருவதாக சொன்னார்.

அந்த மணியிடம் கோகுல் சொன்ன ஸ்பீடு ரமேஷ் பற்றிய தகவல்களை விசாரித்துக் கொண்டு கோகுலை பார்க்கச் சென்றேன். அந்த ரமேஷ் இரண்டு வீடுகளுக்கு வழக்கமாகச் செல்வாராம். கடந்த சில நாட்களாகவே அவரை சரியாக பார்ப்பதில்லை என அவர் கூறியிருந்தார். அதை கோகுலிடம் சொன்னேன். அவன் உடனே ஒரு முகவரிக்கு அவனும் இன்னொன்றிற்கு என்னையும் போகச் சொன்னான். எனக்கு போக பிடிக்கவில்லை. இருந்தும் அவனின் கட்டாயத்தால் வேறு வழியின்றி கிளம்பினேன்.


-------------------------------------------------------

       ஃபிளாஷ்பேக் - 3           
       “மாலா இதான் ஒரே வழி வேற வழியே இல்ல.”


“ஆனா ஆகாஷ் பயமா இருக்கு”


“பயந்தா நீ சிங்கப்பூர்ல இருக்கிற உன் அத்தைப்பையனை கட்டிகிட்டு அங்கேயே செட்டிலாக வேண்டியதுதான்.”


“அப்படி சொல்லாத ஆகாஷ். உன் கூட ஓடி வரதில கவலையில்ல. என் அண்ணனை நினைச்சாதான் பயமா இருக்கு.”


“பயந்த வேலைக்காவாது. நாளைக்கு நைட் நான் உங்க ஊர் கோயில்ல காத்திருப்பேன். நீ வந்துரு நாம அங்கிருந்து எங்க ஊர்க்கு போயிடலாம். அங்க கல்யாணம் பண்ணிட்டு என் அண்ணன்கிட்ட போவோம். என் அண்ணன் என் மேல ரொம்ப பாசம் வச்சிருக்கார். அவர் நம்மளை பார்த்துப்பார்.”
       


-------------------------------------------------------

ஏதேதோ சம்பவங்களும் செய்திகளும் என் வாழ்வில் சில நாட்களாக நடப்பதை உணர்ந்தேன். குழப்பமும் அதிர்ச்சியும் ஆச்சரியங்களும்தான் மிஞ்சியிருக்கிறது. முடிவு என்ன காலம்தான் சொல்ல வேண்டும்.
அந்த ரமேஷின் ஒரு முகவரி நோக்கிச் சென்றேன். அந்த வீடு பூட்டியிருந்தது. அக்கம்பக்கத்தில் யாருமில்லை. சென்றுவிடலாமென கிளம்பியபோது ஏதோ வீட்டுக்குள்ளே சத்தம் கேட்டது போல் இருந்தது. சந்தேகத்துடன் அந்த வீட்டை சுற்றி வந்த போது மூடியிருந்த ஒரு ஜன்னல் வழியே லேசாக குரல் கேட்டது.

“அபி நாம இங்க வந்தும் நம்மாளால கல்யாணம் பண்ணிக்க முடியல பார்த்தியா எவ்வளவு பிரச்சினை. உன் அப்பா நமக்கு நிச்சயம் தொல்லை கொடுப்பார்னு சொன்னேன்ல....நாம பிரிஞ்சிடுவோமோன்னு பயமா இருக்கு அபி”

“இதப்பாரு நீ இல்லாம என்னால இருக்க முடியாது கார்த்தி”

“என்னாலயும்தான். உன் பேரை என் நெஞ்சில பச்சை குத்தி வச்சது சும்மா இல்ல அபி. அது என்னோட அன்பின் வெளிப்பாடு. நீ இல்லாத வாழ்க்கையில நானும் இருக்க மாட்டேன் அபி”

”உன் மாமா நம்மளைதான் மறுபடியும் சென்னைக்கே அனுப்பி வைக்கிறன்னுட்டார். இப்ப நம்மளை அங்க தேட மாட்டங்கன்னு சொன்னார். என்ன பண்ணுறது?”

“மாமா ஹெல்ப் பண்ணுவார்னு நினைச்சேன் அபி. அவர் இவ்வளவு கோழையா இருப்பார்னு நினைக்கலை. நாம சென்னைக்கே போயிடுவோம். எப்படியாவது நாம அங்கே போய் கல்யாணம் பண்ணிப்போம்”

அவர்கள் பேசுவதை கேட்டு அமைதியாக நின்றேன். அவர்கள் உண்மையான அன்பால் எனக்கு அவர்களை பிரிக்க தோன்றவில்லை. என் காதல் தோல்வி கூட அதற்கு காரணமாக இருக்கலாம். சரி கோகுலை திசை திருப்பி விட்டு விடலாம். இவர்கள் சென்னை சென்று எப்படியாவது வாழட்டும். நான் பிறகு மாட்டினால் பார்த்துக் கொள்ளலாம்.

”கோகுல் இங்க அவங்க இல்ல விசாரிச்சதில அவங்க மாமா கோயம்புத்தூர் போறதா பேசிக்கிட்டதா தெரிஞ்சது” போனில் பொய்யாக சொல்லிவிட்டு கிளம்பினேன்.
----------------------------------------


ஒரு செக்லிஸ்ட்:


----------------------------------------


லாட்ஜுக்கு செல்லும் வழியில் நேற்று ஷீலாவை பார்த்த ஞாபகம் வந்தது. நேற்று கிளம்பும்போது அவளிடம் சொல்லிக் கொள்ளக் கூட இல்லை. ஹாஸ்பிடல் அருகில் இருந்ததால் அங்கே போனேன். சொப்னாவின் அப்பா டிஸ்சார்ஜ் ஆயிருந்தது தெரிந்து. ஷீலா இருந்தா வார்டுக்குச் சென்றேன். அங்கே அவள் இல்லை. ஒரு நர்சிடம் விசாரித்தேன்.

“சிஸ்டர், இங்க ஷீலான்னு ஒருத்தங்க இருந்தாங்களே, அவங்க எங்க?”

“அவங்களா அவங்களை வேற வார்டுக்கு மாத்திட்டாங்க. ரொம்ப சீரியஸா இருக்காங்க”

“சீரியசா, என்னாச்சு சிஸ்டர்?”

“உங்களுக்கு தெரியாதா? அவங்களுக்கு கேன்சர். இப்ப அவங்க கடைசி நாட்கள்ல இருக்காங்க. நேற்று சாயங்காலம் ரொம்ப சீரியசாயிட்டாங்க. எந்நேரமும் உயிர் பிரியலாம்.”


------------------------------------------------


       ஃபிளாஷ்பேக் - 4           
       ”மாமா இவளை இழுத்துட்டு போங்க. இவனை நான் பார்த்துக்கிறேன்.”


”அண்ணா ஆகாஷை விட்ருங்க. அவர் பாவம்”


மாலாவுக்கு பளாரென அறை விழுந்தது. ஆகாஷ் மாலாவின் அண்ணனிடம் பயங்கரமாக அடிவாங்கிக் கொண்டிருந்தான்.


“போதும்பா அவனை விடு செத்துரப் போறான்.”


“இவனுக்கு என்ன தைரியமிருந்தா. என் தங்கச்சியை இழுத்துட்டு போகப்பார்ப்பான். இவனுக்கு யாருமில்லையாம் அண்ணன் மட்டும்தானாம். ஆனா இவளை நல்லா வச்சு காப்பாத்துவானாம்! சொல்றானே.  அநாதைப்பைய! சோத்துக்கு பிச்சை எடுக்கிற நாய்க்கு காதல் கேட்குதா....பரதேசி நீயெல்லாம் காதலிக்க நினைச்சதுக்கு நாண்டுகிட்டு சாவனுமிடா............................................”


இன்னும் என்னென்னவோ பேசினான். மாலாவின் அண்ணன் பேசி தகாத வார்த்தைகளை கொடுமையான பேச்சையும் கேட்க கேட்க ஆகாஷுக்கு அங்கேயே செத்துவிடலாம் போல இருந்தது.
       




------------------------------------------------


ஷீலாவுக்கு கேன்சர் என்பதே அதிர்ச்சி. அவள் சாகப்போகிறாள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவளை பார்க்க போனபோது நேற்று இருந்தது போலவே இல்லை. பெட்டில் ஆக்ஸிஜன் மாஸ்க்கோடு இருந்தாள்.

“அவங்க தான் இறந்தவுடனே குழந்தையை ஒரு நல்ல ஆர்ப்பனேஜ்ல ஒப்படைக்கணும்னு ஆசைப்படுறாங்க. அதை தான் நேற்றுகூட என்கிட்ட சொல்லிகிட்டு இருந்தாங்க”

அந்த நர்ஸ் சொன்னது நினைவுக்கு வந்தது. அவள் குழந்தை இன்னும் விவரம் தெரியாத வயதில் இருக்கிறான். அவள் கணவன் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. ஷீலாவின் தோற்றம் அவள் கணவன் இறந்திருக்கவில்லை என்றே சொன்னது. மனதில் நிறைய கேள்விகளுடன் ஷீலாவை நோக்கிச் சென்றேன்.

என்னைப் பார்த்தவுடன் அவள் கண்கள் விரிந்தன. பின் நான் சொல்ல சொல்ல கேட்காமல் அந்த ஆக்ஸிஜன் மாஸ்க்கை கஷ்டப்பட்டு எடுத்துவிட்டு மிகவும் மூச்சு வாங்க பேசினாள்.

“வா ஜெயந்த். ஊருக்கு போகலையா”

“ஷீலா ஏன் நேற்று என்கிட்ட சொல்லல? என்னாச்சு எப்படி?” என்னால் பேசமுடியவில்லை.

“ஏதேதோ நடந்துடுச்சு என் வாழ்க்கையில. அதுல இந்த கேன்சரும் ஒன்னு. நான் சாக பயப்படல. ஆனா எனக்கப்புறம் என் குழந்தை என்ன ஆவானுதான் கவலைப்படறேன்” அவள் கண்ணீர் என்னையும் கலங்க வைத்தது.

“ஜெயந்த் ஒரு உதவி செய்வியா”

”சொல்லு ஷீலா என்னவா இருந்தாலும் செய்யறேன்”

“என் குழந்தையை ஒரு நல்ல அநாதை இல்லத்தில சேர்த்துடேன். உன்னை நம்புறேன் ப்ளீன் இந்த ஹெல்ப் பண்ணுவியா?”

“கண்டிப்பா பண்ணுவேன் ஷீலா. ஆனா உனக்கு ஒன்னும் ஆவாது கவலைப்படாதே.”

அவள் சிரித்தாள். அவள் முடிவு அவளுக்கு தெரிந்திருந்தது.. பேசிக்கொண்டிருந்த அவளுக்கு திடீரென மூச்சிரைப்பு அதிகமாகியது. உடனே டாக்டர்களை அழைத்தேன்.

அவள் மகன் ஜெகனை ஒரு நர்ஸிடம் இருந்தான். அம்மாவிடம் செல்ல வேண்டுமென அழுது கொண்டிருந்தான். ஷீலா என்னிடம் பெரிய பொறுப்பை தந்திருக்கிறாள். ஆனால் அவள் கணவன் என்ன ஆனான்? அவள் ஏன் இப்படி தனியாய் இருக்கிறாள்? அவள் ஏன் ஜெயிலுக்கு போனாள்? ஜோதியிடம் பிரிவதற்கு முன் ஏதோ நடந்திருக்கிறது அதையும் என்னிடம் நேற்று மறைத்தாள்.

பல கேள்விகள் என் முன் இருந்தது. குழப்பமாக நின்றிருந்தேன். என் எந்த கேள்விகளுக்கும் விடை சொல்லாமல் அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகு ஷீலா இறந்து போனாள்.

தொடரும்...


ஜோதி - VII

கதையின் முந்தைய பாகங்கள்..


  
அவர் ஸ்வப்னாவின் அப்பாவென்று தெரிந்த பின் ஆச்சரியமானேன். அவரிடம் விசாரித்தபின் அவர் வீட்டில் அவரும் அவர் மகளும் மட்டும்தான் என தெரிந்தது. நான் என்னைப் பற்றியும் கம்பெனி பற்றியும் சொன்னவுடன் ஸ்வப்னாவின் கொலீக் என புரிந்து கொண்டார். ஆனால் நான் ஸ்வப்னாவுடன் அதிகம் பழக்கமில்லை என்றே சொன்னேன். ஸ்வப்னாவின் ஞாபகம் வந்துது. அந்த காதல் கடிதத்திற்கு இன்னும் பதில் சொல்லவில்லை. அவளிடம் எப்படியாவது எனக்கு விருப்பமில்லை என்பதை புரிய வைக்க வேண்டும்!

அவரிடம் பேசிவிட்டு கோகுலை பார்க்க வந்தேன். அவனோ நான் எப்போது வருவேன் எல்லாவற்றையும் சொல்லலாம் என காத்திருந்தான் போல மடமடவென பேசினான்.

“ஜெயந்த் உன்னை விட்டுட்டு அந்த ஸ்பீடு ரமேஷை தேடிப் போனேண்டா. அந்த கோயில்ல விசாரிச்சப்ப, முதல்ல எல்லோரும் அப்படி யாருமே இல்லையே அப்படின்னு சொன்னாங்க. ஒருத்தனை நல்லா கவனிச்சேன். அவன் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் வீட்டை கண்டுபுடிச்சிட்டேன். அங்க பார்த்தா அவன் வீட்டு பூட்டியிருக்கு. விசாரிச்சதில ஒரு ஆணும் பெண்ணும் அங்க வந்ததாகவும் இன்னைக்கு காலையில் எங்கோ போனதாகவும் சொன்னாங்க. அந்த ரமேஷ் ஃபிரண்டு எவனோ மணிகண்டனாம் லேடிஸ் ஹாஸ்டல் நடத்துறானாம் பக்கத்தில் அவனை விசாரிச்சா தெரியும்டானுங்க. நைட்டாயிடுச்சா அங்க போய் விசாரிக்க முடியாது. காலையில் முத வேலையா அங்கதான் விசாரிக்கனும். நான் பாஸ்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன்........”

அப்படியே கேட்டுக் கொண்டு தூங்கிப் போனேன்.

***************************

காலையில் எழுந்தபோது பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தான் கோகுல்.

“டேய் எங்கேடா கிளம்புற?”

“எங்கேயா! நைட்டு சொன்னேன்ல. பாஸ் அவர் பிரண்டு இன்ஸ்பெக்டரா இங்க இருக்காராம் அவரை பார்த்து நாம சேகரிச்ச தகவல் சொல்ல சொன்னார். நான் அவரை பார்க்க போறேன். நீ அந்த மணிகண்டனை பார்த்து விசாரிச்சுட்டு வா.”

அவன் வழக்கம்போல பரபரப்பாக கிளம்பினான்.

*********************************



ஒரு படம்:





*********************************

அந்த லேடிஸ் ஹாஸ்டல் என்னை கொஞ்சம் பயமுறுத்தியது. யாரோ யாருடனோ சண்டை போட்டுக் கொண்டிருந்தது கேட்டது. மாடியில் ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.

“இதப்பாருங்க நீங்க ஒன்னும் ஒழுங்கா ஹாஸ்டல் நடத்தல. ஒரு வசதியும் ஒழுங்கா இல்ல. வாடகை தரலைன்னா மட்டும் சத்தம் போடுறீங்க”

“இதோப்பாரு இஸ்டம் இல்லன்னா போய்கிட்டே இரு. சும்மா சவுண்ட் உடாதே! உன் லட்சணம் எனக்கு தெரியும்!”

“என்னாத்த தெரியும்? என்னமோ பொல்லாத ஹாஸ்டல் நடத்தற. ஆறுமாசம் முன்னாடி கூட ஒரு பொண்ணு காணாம போச்சே நீ அதை எப்டி மறைச்சே அதை சொன்னா நாறிடும்!”

“ஏய் போடி! தேவையில்லாததெல்லாம் பேசுன, நான் பொல்லாதவளா ஆயிடுவேன்!”

அப்பாடி! என்ன இவர் இப்படி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். என்னென்னமோ சொல்கிறார்கள். ஹாஸ்டலை விட்டு சீக்கிரம் செல்ல வேண்டும். மணிகண்டன் யாரென்று யார்கிட்ட விசாரிக்கலாம்?  சண்டை போட்ட பெண்ணும் அவளுடன் இன்னொருத்தியும் மாடியிலிருந்து இறங்கினார்கள்.

“என்னடி சொல்ற? ஆறு மாசம் முன்னால ஒரு பொண்ணு காணாம போச்சா?”

“ஆமாண்டி, அந்த பொண்ணை யாரோ வந்து கூட்டிட்டு போனாங்க. அப்புறம் வரவே இல்லை. அதோட துணிமனியெல்லாம் இங்க இருக்கு. இந்த பொம்பளை போலீஸ் வந்த ஹாஸ்டல் பேர் கெட்டுடும். அவளை தேடி யாரும் வரலைன்னு அப்படியே அமுக்கிடுச்சு. இவ புருசன் அந்த மணிகண்டனும் அப்படியே மறைச்சிட்டான்”

“சே! என்னடி இப்படியா இருப்பாங்க. சீக்கிரம் வேற ஹாஸ்டல் பார்க்கனும்.”

“ஆமாண்டி, சே, அந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கும்டி. யார்கிட்டயும் சரியா பேச கூட இல்ல. நான் பேர் கேட்டப்ப பேர் மட்டும் சொல்லுச்சி. என்னவோ பேரு...ஆங். ஜோதி!”




***********************


       ஃபிளாஷ்பேக் - 1           
       ”குமார் நாளைக்கு ஊருக்கு போறியாடா? முரளியும் நாளை மறுநாள் ஊருக்கு போய்டுவான்.” மிகவும் சோகத்தோடு சொன்னான் கணேஷ்.


”டேய் கணேஷ் எனக்கு டாக்டர் படிப்புடா. இன்னும் மூணு வருசம் முடிச்சப்புறம் எங்கப்பா இங்க ஹாஸ்பிடல் கட்டி தரேன்னு சொல்லியிருக்கார் அப்புறம் இங்கதானே இருக்க போறேன்.” என்றான் முரளி.


”ஆமாண்டா. எனக்கும் ஒரு வருசம்தான் படிப்பு. முடிஞ்சா இங்க எங்கேயாவது வேலை தேடிப்பேண்டா.”


”குமார், முரளி எனக்கு யார்டா இருக்கா அம்மா அப்பாவும் இல்ல. ஒரே ஒரு தம்பி மட்டும்தான். அவனும் இப்ப படிக்க கோயம்புத்தூர் போய்ட்டான். சின்ன வயசில இருந்து நீங்கதாண்ட எனக்கு துணை. நீங்க ஊர்ல இல்லாதப்ப இருக்கிற தனிமையை என்னால தாங்கிக்க முடியலடா. ஒரு அநாதை மாதிரி.........” அழுதான் கணேஷ்.


“டேய் கணேஷ் ஏண்டா அழுவுற. நாங்க இருக்கோம்ல. வாழ்நாள் ஃபுல்லா நாங்க உன் கூட இருப்போம்டா. நீ அநாதை இல்லடா. நாங்க இருக்கோம்....”


“நிச்சயமா இருப்பீங்களா? சொல்ல முடியாது. வேலை, குடும்பம்னு ஆளாளுக்கு ஒரு பக்கம் போய்டுவீங்க. நான் எப்பவும் தனிதான். ஒரு தம்பி அவன் என்னை விட கவலைப்படுவான்.,,,எனக்குன்னு ஒன்னுன்னா யார் இருக்கா?”


“டேய்! என்ன வார்த்தடா சொன்ன? நாம சின்ன வயசில இருந்து ஒன்னா இருந்து விளையாடி பேசி பழகினதா நாங்க மறந்துடுவோமா? உனக்கு ஒன்னுன்னா நாங்க இருப்போம்டா! நிச்சயம் கூட இருப்போம்!”

       


*********************

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஜோதி ஆறுமாதம்  முன்பு இங்கே இருந்தாளா! அந்த பெண்களிடம் விசாரித்து விட்டு மேலே இருந்த பெண்மணியிடம் விசாரித்தேன். அவள் அப்படி யாரும் இப்போதும் இல்லை இருந்ததும் இல்லை என சொல்லிவிட்டாள். எவ்வளவோ விசாரித்தேன். அப்பட்டமாய் மறைத்தாள். ரொம்ப கேட்டா தாப்பயிடுமே என்ன பண்ணுவது என புரியாமல் அவள் கணவன் மணிகண்டனை கேட்டபோது, அவன் வெளியே சென்றிருப்பதாகவும் சொன்னாள்.

எப்படியும் அவள் கணவனிடம் கேட்டு விடலாம். என கீழே இறங்கி வந்தபோது ஃபோன் ஒலித்தது.

“ஹலோ”

“ஜெயந்த் நான் அம்மா பேசறேன்.”

“அம்மா எப்படி இருக்கீங்க. வீட்ல எல்லோரும் நல்லா இருக்காங்களா”

“எல்லோரும் நல்லா இருக்காங்கப்பா. அப்புறம் நானும் ரொம்ப நாளா கேட்கிறேன். நீ பதிலே சொல்ல மாட்ற.”

“என்னதும்மா?”

“தெரியாத மாதிரி கேட்காதே. உன் கல்யாணத்தை பத்தி தான். நீ சரின்னு சொன்னா உடனே பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிடுவேன்.”

“அம்மா இப்ப இருக்கிற மூட்ல என்னால கல்யாணம்லாம் பண்ண முடியாது நான் அப்புறம் பேசறேன்.”

போனை வைத்து விட்டு கிளம்ப முனைந்தபோது. ஒருவர் அந்த வீட்டை நோக்கி வந்து மாடியில் ஏறுவதை கண்டேன். அவர் போன் பேசிக் கொண்டே மேலே ஏறினார். அதில் ’நான் மணி பேசறேன்’ என்று சொன்னதன் மூலம் அவர்தான் நான் தேடி வந்த ஆள் என புரிந்தது. மீண்டும் வீட்டை நோக்கி சென்றேன்.

*********************


       ஃபிளாஷ்பேக் - 2  
   
   
”அண்ணா. போய்ட்டு வரட்டுமா?”


“சரிடா. நல்லா படி. என்னாலதான் படிக்க முடியலை. இந்த ஊர்ல கூலி வேலை செஞ்சு கஷ்டப்படுறேன். நீயாவது நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போகனும்.”


“சரிண்ணா.”


“அங்க ஹாஸ்டல்ல பத்திரமா இரு. நல்லா படி. வேற எதிலயும் கவனம் செலுத்தாதே.”


”சரிண்ணா. வரட்டுமா?”


கணேஷ் சிறிது நேரம் தன் தம்பியையே பார்த்திருந்து விட்டு பின் அருகில் சென்று அவனை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான். பிறகு கண்களில் லேசான கண்ணீர்த் துளிகளோடு வழியனுப்பினான்.


“பத்திரமா போய்ட்டு வா ஆகாஷ்”

       


*********************

”அவன் வந்து இங்கே ஜோதின்னு யாராவது இருக்காங்களான்னு கேட்டான்னு நான் அப்படி யாரும் இங்கே இல்லையேன்னு சொல்லி அனுப்பிட்டேன்

””நல்ல வேலை செஞ்சே. யார் வந்து கேட்டாலும் இப்படியே சொல்லு!””



அவர்கள் பேசியதை கேட்டு கோபமாகச் சென்றேன். நான் கேட்டு விட்டதை உணர்ந்து தடுமாறினார்கள். நான் போலீஸுக்கு செல்வேன் என கொஞ்சம் மிரட்டிய பின் அவர்கள் உண்மையை சொன்னார்கள்.

”சார் ஆறு மாசம் முன்னால அந்த பொண்ணை ஒருத்தர் இங்க கூட்டிட்டு வந்து விட்டார். கூட்டிட்டு வந்தவர் எங்களுக்கு தெரிஞ்ச நண்பர் ஒருத்தருக்கு பழக்கமானவராம். அந்த பொண்ணு இங்க ரொம்ப அமைதியா இருந்திச்சு. ஒரு வாரம் கழிச்சி அந்த பொண்ணை பார்க்க இன்னொருத்தர் வந்தார். ஒரு முக்கியமான வேலை. அவர் கூட போய்ட்டு வரேன்னு போச்சு. அப்புறம் இதுவரைக்கும் வரவே இல்லை!”




தொடரும்...

தமிழிசையும் தமிழ்மணமும்...

சில நிகழ்வுகள் நம்மை நிலை தடுமாறச் செய்யும், சில நிகழ்வுகள் நமக்கு நிலை கொள்ளா சந்தோசத்தை கொடுக்கும். இது போன்ற நிகழ்வுகள் நம் வாழ்வில் பல சமயங்களில் பலத்த எதிர்ப்பார்ப்பு களுக்கிடையில்  நிகழ்கிறது. சில சமயங்களில் எந்த வித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் நடந்தேறுகிறது. இது போன்று சற்றும் எதிர்பார்த்திராத ஒரு மகிழ்ச்சியான சேதி பொங்கலன்று காலையில் நண்பன் சௌந்தர் மூலமாக தெரிய வந்தது.  அந்த சேதி தமிழ் மனம் நடத்திய தமிழ்மணம் விருதுகள் 2010 போட்டியில் பங்கெடுத்ததன் மூலம்.  தமிழிசை, நடனம், தமிழ் கிராமியக் கலைகள் தொடர்பான கட்டுரைகள் என்ற பிரிவில் தமிழிசை & தமிழிசைக் கருவிகள் பற்றி - அறிந்ததும் அறியாததும் - 3    என்ற இடுகைக்கு இரண்டாவது பரிசு கிடைத்துள்ளது என்பது தான். தமிழர் திருநாளன்று சர்க்கரை பொங்கலுக்கு பதிலாக ஒரு இனிக்கும் தகவலை தந்த தமிழ்மணம் குழுவினருக்கு நன்றி. 

எதேச்சையான நிகழ்வுகள் சில சமயம் எதிர்பாராத பலனை தருகின்றன. அப்படி நடந்தது  தான் இந்த தமிழ்மணம் போட்டியில் பங்கெடுத்ததும், வெற்றி பெற்றதும். போட்டிகளுக்கும் வெற்றிகளுக்கும் நமக்கு வெகு தூரம். சொன்னால் நம்புவீர்களா இதற்கு முன்னால் நான் பரிசு வாங்கியது 15 வருடங்களுக்கு முன்பு ஆறாம் வகுப்பில் அந்த வருட சிறந்த மாணவனுக்கான பரிசாக "திருவாசகம்" புத்தகம் கிடைத்தது.  அது தான் முதலும் கடைசியுமாக வாங்கிய பரிசு. அதற்கு பின்னர் எனக்கு கிடைத்த பரிசு இது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது அதே சமயம் ஆச்சர்யமாகவும் இருக்கிறது. எப்படி இல்லாமல் போகும் ஜாம்பவான்களின் களத்தில் ஒரு சிறுவனின் பதிவும் வந்திருக்கிறதென்றால் ஆச்சர்யமான விஷயம் தானே.

தமிழ்மணத்தில் பரிசு பெற்ற இந்த
தமிழிசை & தமிழிசைக் கருவிகள் பற்றி - அறிந்ததும் அறியாததும் - 3  இந்த இடுகை நான் பதிவெழுத ஆரம்பித்த காலத்தில் எழுதிய ஓன்று.  இந்த பதிவுக்காக சுமார் ஒரு வாரத்திற்கும் மேல் தகவல்களை தேடியிருக்கிறேன்.  அதுமட்டுமல்லாமல் அந்த படங்களுக்காகவே சில நாட்கள் செலவானது. கடந்த சில மாதங்களாக இது போன்ற இடுகைகளை நேரக்குறைவு காரணமாக எழுத முடியால் போனது. இது போன்ற ஊக்குவிப்புகளை பார்க்கும் பொது இன்னும் இது போன்ற நல்ல விசயங்கள் சொல்லும் இடுகைகளை எத்தனை வேண்டுமானாலும்  எழுதலாம் என்று தோன்றுகிறது. 


எனது பதிவினை இரண்டு சுற்றுகள் வரை தள்ளிக்கொண்டு போன எனது நண்பர்கள் மற்றும் பதிவுலக அன்பர்களுக்கும், இரண்டாவது பரிசுக்கு  தேர்வு செய்த தமிழ்மணம் குழுவினருக்கும் எனது நன்றிகள். சேதி அறிந்தவுடன் பின்னூட்டம் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் எனக்கு வாழ்த்துக்களை கூறிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ஆரியம் நன்றிகள். மேலும் எனது இந்த போட்டியில் பங்குபெற்று வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற
தேவா அண்ணன், நண்பன் சௌந்தர் மற்றும்  அனைத்து வெற்றியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஜோதி - VI

கதையின் முந்தைய பாகங்கள்..

============================================================


ஷீலா சொன்னதை கேட்டு எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

”என்ன சொல்ற ஷீலா? நீ சென்னை வரக் காரணம் ஜோதியா?”

“ஜெயந்த். நான் காலேஜ்ல படிக்கிறப்பா காதலிச்சு வீட்டை விட்டு வந்துட்டேன். ஆனா ஆசையை செஞ்சுகிட்ட கல்யாணம் நிலைக்கல.” சிறிது மவுனமாய் இருந்து விட்டு தொடர்ந்தாள்.

“யாருமில்லாத அனாதையாய் நானும் என் மகன் ஜெகனும் இந்த சென்னைக்கு வந்தோம். அங்கே ஒரு கம்பெனியில் லேபரா வேலை செஞ்கிட்டு இருந்தேன். புதுசா வீடு மாத்தினப்பதான் தெரிஞ்சது அங்க பக்கத்திலதான் ஜோதி இருந்தா.”

“பழைய நட்பை அவ புதுப்பிச்சுக்க விரும்பினாள். எந்த உறவுகளும் இல்லாம இருந்த எனக்கும் அவ நட்பு ஒரு சந்தோசத்தை கொடுத்திச்சு. அவளுக்கு குழந்தைங்கன்னா ரொம்ப புடிக்கும். அவளுக்கு குழந்தை பிறக்கலை. அதனாலாயே என்னவோ என் மகன் ஜெகன் கூட ரொம்ப அட்டாச் ஆயிட்டா.”

“முக்காவாசி நேரம் என் வீட்லதான் இருப்பா. நான் வேலைக்கு போற நேரத்தில் குழந்தையை வழக்கமா கிரச்லதான் விடுவேன். ஆனா அவ தானே கவனிச்சிக்கிறேன்னு சொல்லிட்டு பார்த்துப்பா. அவ எங்க கூட பழகினது எங்களுக்கும் அவளுக்கும் ரொம்ப சந்தோசத்தை தந்தாலும் அது அவ கணவருக்கும் மாமியாருக்கும் சுத்தமா பிடிக்கலை.”

“இருந்தாலும் அவ எங்க கூட பழகறதை விடலை. எங்களை பார்க்காம பேசாம ஒரு நாள் கூட இருந்ததில்ல. இதனால அவ வீட்ல அடிக்கடி சண்டை கூட வரும். நான் கூட என்னால எதுக்குடி சண்டை? நீ என் வீட்டு வராதேன்னு கூட சொல்லிப் பார்த்தேன் அவ கேட்கலை.”

“ஒருகட்டத்தில் அவளுக்கும் அவ வீட்டுக்காருக்கும் பயங்கர சண்டை. அப்புறம்...”

அமைதியாக இருந்தாள் ஷீலா. எதையோ மறைக்கிறாள் என புரிந்தது.

“அப்புறம் நான் அவங்களுக்கு பிரச்சினை தர வேணாம்னு நான் இங்க வந்துட்டேன். இப்ப அவ சென்னையில் அவ புருசனோட சந்தோசமா இருப்பா.”

அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த நான் பேசினேன். “இல்லை ஷீலா. நீ இங்க வந்து ஆறு மாசமாச்சுல்ல. அதே ஆறுமாசம் முன்னால ஜோதி காணாமபோயிட்டா”

“என்ன ஜெயந்த் சொல்ற?”

“ஆமா அவ காணாம போயிட்டா இதுவரை தேடி எங்கேயும் கிடைக்கலை. அவ புருசன் அங்கே கவலையோட சுத்திகிட்டு இருக்கார். எனக்கே இது கொஞ்ச நாள் முன்னாடிதான் தெரியும்”

ஷீலா வருத்தப்பட்டாள். அவள் எதற்காக வீட்டை விட்டு வந்தாளோ அந்த காரணம் நிறைவேறவே இல்லையே!

“சரி ஷீலா. எனக்கு ஒன்னே ஒன்னுதான் புரியலை. ஜோதியோட ஹஸ்பெண்டும் மாமியாரும் ஏன் உன் கூட பழகுறத விரும்பலை?”

அமைதியாக இருந்தாள். கண்களில் கண்ணீர்....! அழுகிறாளா என்ன?

“நான் ஜெயிலுக்கு போயிட்டு வந்தவன்றதுதான் காரணம்”


**************************






ஒரு டைரி:




***************************

”சார் நீங்க கூட்டிட்டு வந்த பேஷண்ட் கண்ணு முழிச்சிட்டார். உங்களை பார்க்கணும்னு சொன்னார் நர்ஸ் வந்து சொன்னதும் அவரை பார்க்கச் சென்றேன்.

ஷீலா சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. அவள் ஜெயிலுக்கு போய்ட்டு வந்தவளா? ஆனால் அவள் அப்படி எந்த தப்பும் செய்பவளில்லையே. காரணம் கேட்டால், கண்ணீர்தான் பதிலாக வருகிறது. அவளை வற்புறுத்த எனக்கு மனமில்லை. ஷீலாவின் கணவன் பற்றியும் தெரியவில்லை. அவள் ஜெயிலுக்கு சென்றேன் என்கிறாள். ஒரே புதிராக இருக்கிறாள். ஆனால் அவளை நினைத்தால் பாவமாகத்தான் இருந்தது. சரி இவள் ஜோதிக்காக இங்கே வந்துவிட்டாள். அப்படியானால் ஜோதி அங்கேயே அவள் கணவனோடு வாழ்க்கையை தொடர்ந்திருக்க வேண்டுமே. ஆனால் அப்படி நடக்கவில்லை. அப்படியானால் ஜோதி எங்கே? என்ன ஆனாள்?

செல்போன் அடித்தது. கோகுல் அழைக்கிறான்.

“ஹலோ கோகுல்?”

“ஜெயந்த் நான் சொல்ற அட்ரஸ்ல இருக்கிற லாட்ஜுக்கு வந்துடு. நம்ம இரண்டு பேரும் தங்க ரூம் போட்ருக்கேன்.”

“சரிடா. போன காரியம் என்னாச்சு?”

“எல்லாம் வந்தவுடனே சொல்றேன். நாம இங்க இன்னும் கொஞ்ச நாள் தங்க வேண்டியதிருக்கு.”

****************************************





ஒரு படம்:





**********************************

அந்த அடிபட்டவரை பார்க்கச் சென்றேன். ரொம்ப அடிபடவில்லை. பிரஷர் இருப்பதால்தான் மயங்கியிருக்கிறார். இரவு இருந்துவிட்டு காலையில் டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என்றார் டாக்டர்.

“ஹலோ சார். வணக்கம். என் பேர் ஜெயந்த்”

“வணக்கம் தம்பி. என் பேர் ராஜசேகர். ரொம்ப நன்றி தம்பி ஆஸ்பிட்டல்ல சேர்த்ததுக்கு”

”அதெல்லாம் எதுக்கு சார்? நாங்க தான் அவசரப்பட்டு வண்டியில இடிச்சிட்டோம். மன்னிச்சிருங்க சார்.”

“எத்தனையோ பேர் விட்டுட்டு போறாங்க நீங்க அக்கறையா சேர்த்தீங்க அது போதும்பா. ஒரு சின்ன உதவி. என் செல்ஃபோன் எங்கே போச்சுன்னு தெரியலை. அது...”

“அதுவா, உங்க ஃபோன், பை எல்லாம் நான்தான் எடுத்து வச்சேன். இதோ இருக்கு.”

“ஒன்னுமில்ல தம்பி நான் இன்னைக்கு நைட் சென்னை போறதா இருந்தேன். இப்படி ஆயிடுச்சு வீட்ல பொண்ணு தனியா இருக்கும் அதான் ஃபோன் பண்ணி சொல்லனும்.”

அவர் ஃபோன் செய்து பேச ஆரம்பித்தார்.

“அம்மாடி ஸ்வப்னா.. நான் அப்பா பேசறேன். இன்னை வரதா சொன்னேன்ல. இங்கே ஒரு சின்ன பிரச்சினை. அதான் வர முடியலை. நாளைக்கு சாயங்காலத்துக்குள்ள கண்டிப்பா வந்துருவேன்.. நீ பத்திரமா இரும்மா”

(தொடரும்)..

கடந்த ஆண்டு நினைவுகள்...

தொண்ணூறுகளின் இறுதியில் ஆரம்பித்த டைரி எழுதும் பழக்கம் 2010 களின் ஆரம்பத்திலிருந்து சோம்பேறித்தனத்தாலும் பதிவுலகின் அறிமுகத்தாலும் என்னிடமிருந்து வழக்கொழிந்து போய் விட்டது. ஆனாலும் ஒரு வருட டைரிக்குறிப்புகளை மொத்தமாய் ஒரே பதிவில் எழுதுவதும் சுவாரஸ்யமாகத் தானிருக்கிறது. 
  
ஒவ்வொரு வருடமும் நம்மை கடந்து செல்லும் பொது அதன் நினைவாக அவ்வருடத்தில் நடந்த சந்தோசம் அல்லது துக்கம் என ஏதாவது நினைவுகளை நமக்கு விட்டு தான் செல்கின்றன. இப்படி என்னை கடந்து சென்ற கால் நூற்றாண்டுகளுக்கும் மேலான வருடங்களில் கடந்த 2010 கொஞ்சம் அதிகமாகவே சந்தோசங்களையும், சிறிதும் பெரிதுமாய் பல துக்கங்களையும், இழப்புகளையும் அதன் நினைவாக தந்து விட்டு தான் சென்றன. 
 




கடந்த வருடத்தில் நடந்த மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம் அண்ணனின் கல்யாணம் தான். கிடைத்த ஆறு நாள் விடுமுறையில் பத்திரிக்கை வைப்பது முதல்  அனைத்து வேலைகளையும் முன் நின்று நானே பார்த்துக்கொண்டதால்  உடலளவில் சில இடையூறுகள் வந்தாலும் மனதளவில் நான் பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம்.  எங்கள் வீட்டில் நடந்த முதல் விசேஷம். அது மட்டுமல்லாமல் சுமார் பத்து வருடங்களுக்கு பின் குடும்பத்திலுள்ள சொந்த பந்தங்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாய் சந்திக்க கிடைத்த வாய்ப்பு இது. சிறு வயதில் பார்த்து பயந்த அண்ணன்கள் மற்றும் உறவுகள் அனைவரும் அன்றைய தினத்தில் நண்பர்களாய் தெரிந்தார்கள்..  எப்போதும் ஆயிரம் பொய்கள் சொல்லி வருடத்திற்கொரு முறை ஊருக்கு வரும் நான்  கடந்த வருடம் தான் இன்னும் கொஞ்சம் அதிகமான பொய்கள் சொல்லி இரண்டு முறை இந்தியா வந்தேன்..

கடந்த வருடத்தின் மற்றொரு சந்தோசமான் விசயம் எனக்கு பதிவுலகம் அறிமுகமானது தான். வருடத்தின் மூன்றாவது  மாதம் வரை இப்படி ஓன்று இருப்பதே எனக்கு தெரியாது. அறை நண்பரின் உதவியால் அறிந்த பின்னர் ஏன் என்னால் எழுத முடியாது என்று எனக்கு நானே ஒரு கேள்வியை கேட்டுக்கொண்டு துவங்கியது தான் இந்த வலைப்பூ. "வெறும்பய" என்ற பெயரை தேர்வு செய்வதற்கே கிட்ட தட்ட ஒரு மாதங்கள் எடுத்துக்கொண்டேன்..

பதிவுகள் எழுத ஆரம்பித்தது முதல் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வரை என்னை இப்போதுள்ள் நண்பர்களுக்கு தெரியாது.. என்னை எவரும் அறிந்திரா காலகட்டத்தில்  தேவா அண்ணன் மூலமாக வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு ஓரிரு நண்பர்கள் கிடைத்தார்கள். பின்னர் சிறு துளி பெரு வெள்ளம் என்பது போன்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் நண்பர்கள் கூட்டம் வளர்ந்து கொண்டே போனது. இன்னும் வளர்ந்தபடி தான் இருக்கிறது.. இன்னார் இன்னாரென்று தான் என்று குறிப்பிட்டு செல்ல முடியாதபடி நண்பர்கள் பட்டாளமே  இருக்கிறது.  நண்பர்கள் மட்டுமல்லாமல் சகோதர்கள், சகோதரிகள், தோழிகள் என நான் பதிவுலகத்தால் பெற்ற உறவுகள் ஓராயிரம்.

பதிவுகலத்தால் நான் பெற்ற இன்னொரு பொக்கிஷம் வாசிப்பு.. சிறு வயதிலிருந்தே கொஞ்சம் கூட வாசிப்பு பழக்கமே கிடையாது.. இது வரைக்கும் நான் படித்த புத்தகங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதிலும் பெரிய சைஸ் புத்தகங்கள் என்றால் கையில் தொடுவது கூட இல்லை. ஆனால் சமீபக் காலமாக எல்லாம் மாறி வருகிறது, பதிவுலகில் நல்ல பதிவுகளை தேடிப்படிப்பதொடு மட்டுமல்லாமல் புத்தகங்கள் தேடி நூலகங்களுக்கும் செல்லும் நிலை வந்துவிட்டது. இப்போது தான் நான் செய்த  ஆரம்பகால தவறுகள் தெரிகின்றன. வாசிப்பு அதிகமாகும் பொழுதுகளில்  எழுதுவது குறைந்து விடுகிறது. 

பதிவுலகமும் மற்ற பல விஷேசங்களும்   இந்த ஆண்டு முழுவதும் சந்தோசத்தை தந்தாலும் கடைசி மாதம் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டது. முதல் வாரத்திலொரு நாள்  அதிகாலையில் மாரடைப்பால் உயிரிழந்ததாக  வந்து சேர்ந்த சகோதரனின் மரண சேதி, அதற்கு அடுத்தடுத்த  வாரத்தில் வந்த இரு கல்லூரி  நண்பர்களின் மரண சேதி மற்றும் வருடத்தின் கடைசி வாரத்தில் நடந்த பைக் விபத்தினால் இன்று வரை நினைவு திரும்பாத நிலையில் இருக்கும் நண்பன்   என கடந்த மாதம் முழுவதும்  வந்து சேர்ந்தது எல்லாமே துக்கச் செய்திகள் தான். கடந்த பதினோரு மாதத்தில் கிடைத்த மகிழ்வான தருணங்கள் அனைத்தையும் இந்த இழப்புகள் மூடி மறைத்து விட்டன.

இரவும் பகலும் கலந்து உருவாகும் ஒரு நாளை போல சந்தோசமும் துக்கமும் கலந்தது தான் வாழ்க்கையாக இருந்தாலும் நானும் ஒரு சராசரி மனிதனான காரணத்தால் இழப்புகளும் ஏமாற்றங்களும் இல்லாத அடுத்து வரும் வருடங்களை எதிர்பார்த்துக் கொண்டு  இந்த நாட்குறிப்பு முற்று பெறுகிறது.

திரும்பி பார்க்கிறேன் என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத அழைத்து கடந்த காலத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பை ஏற்ப்படுத்திய சகோதரி கௌசல்யா அவர்களுக்கு நன்றி..


படம் உதவி நண்பர் - எஸ்.கே

ஜோதி - V

கதையின் முந்தைய பாகங்கள்..

============================================================

கோகுலும் நானும் தேடுவதற்காக எம்டி தந்த காரில் சென்று கொண்டிருந்தோம்.

“கோகுல் எப்படி எம்டி இவ்வளவு கட்டுப்பாடோடவா இருந்தாரு”

“ஆமாண்டா. பார்த்தேல்ல. சொந்த பொண்ணையே ஹவுஸ் அரஸ்ட் பண்ணி வச்சிருக்காரு. போனை கூட யாராவது பேசுனா பேசியது பதிவாகிற மாதிரி செட் பண்ணி வச்சிருந்திருக்காரு.”

“என்ன பண்ணி என்ன புண்ணியம். அவர் பொண்ணு எப்படியோ ஓடிப் போச்சுல்ல!”

“அநேகமா அவர் காவலுக்கு வெச்சிருந்த வேலைக்காரங்க யாராவது உதவியிருக்கணும்”

“சரிடா. நாம இப்ப எதுக்கு திருச்சி போறோம்?”

“ஏய். நீதான் கேட்டல்ல? அந்த அபிநயாவும், அவ ஃபிரண்ட் கவிதாவும் போன்ல பேசிகிட்ட டேப்பை. அதில் திருச்சிக்கு ஓடிப் போக போறதாதான்னே சொன்னாங்க.”

”அதுசரிடா. ஆனா திருச்சியில எங்கேன்னு போய் தேடுவ?”

கோகுல் புன்னகைத்தான். “ஜெயந்த். நீ எம்டி வீட்டுக்கு வரதுக்கு முன்னால அபிநயா ஃபிரண்ட் கவிதா வீட்டுக்கு ஃபோன் பண்ணி எம்டியே அவங்க அம்மா அப்பாகிட்ட விசயத்தை சொல்லி மிரட்டி கேட்டிருக்காரு. அந்த கவிதாவும் பயந்து உண்மையை சொல்லியிருச்சு. அந்த அபிநயாவும் அவ காதலன் கார்த்திக்கும் திருச்சி உச்சி பிள்ளையார் கோயில்ல கல்யாணம் பண்ணக்க போறதா சொன்னாங்களாம்”

============================================================

============================================================

நாங்கள் திருச்சி சென்றோம். அந்த உச்சி பிள்ளையார் கோயிலுக்கும். அங்கே விசாரித்ததற்கு யாரும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யவில்லை என்றார்கள். இருந்தாலும் கோகுலும் நானும் அன்று முழுவதும் உச்சி பிள்ளையார் கோவிலருகே காத்து கொண்டிருந்தோம். ஆனால் யாரும் வரவில்லை.

சுற்றியுள்ள பகுதிகளிலும் விசாரித்தோம். எந்த நல்ல தகவலும் கிடைக்கவில்லை.  நாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தோம்.

“சே! அந்த கவிதா பொய் சொல்லியிருக்கா. நாம நல்லா ஏமாந்துட்டோம்” கோகுல் கோபத்தின் உச்சியில் இருந்தான். காரில் திரும்பி வரும்போது புலம்பிக் கொண்டே வந்தான். எம்டிக்கு ஃபோன் செய்து விசயத்தை கூறினான்.

“கோகுல். டென்ஷனாவாதே! வா ஒரு டீ சாப்ட்டு யோசிக்கலாம்.” காரை இடையில் ஓரிடத்தில் நிறுத்தி அவனை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள கடைக்கு சென்றேன். செல்லும் வழியில் சிலர் வருவோர் போவோரிடம் ஏதோ நோட்டீஸ் தந்து கொண்டிருப்பதை பார்த்தேன். என்னிடமும் ஒன்று தந்தார்கள்.

நான் அதை வாங்கி பார்த்துக் கொண்டே நடந்தேன். அதில்.... செயலாளர்கள் என்பதில் ஒரு பெயரை கண்டு ஆச்சரியமானேன். ஸ்பீடு ரமேஷ்!

“கோகுல்”

“என்ன ஜெயந்த்?”

“இங்க பாரு.. இந்த பேரு ஸ்பீடு ரமேஷ்..”

“ஆமா அதுக்கென்ன?”

“டேய் நாம கேட்டோம்ல அபிநயா-கவிதா பேசின டேப். அதில் அந்த கார்த்திக் மாமா பேர் ஏதோ ஸ்பீடு ரமேஷோ சுரேசோன்னு சொல்லிருந்தா இல்ல? அந்த மாமா இவரா இருக்குமோ?”

“அட ஆமாண்டா! இவனாத்தான் இருக்கணும்.”

கோகுல் அதிகமாக பரவசப்பட்டான். உடனே வேகமாக ஓடி நோட்டீஸ் தந்தவரிடம் அந்த பண்ணாரியம்மன் கோயில் எங்கே உள்ளது என விசாரித்தான். அந்த கோயில் அருகில் உள்ள ஒரு பகுதியில் உள்ளதென்று சொன்னார்கள்.

“ஜெயந்த். வா சீக்கிரம் வா.. உடனே அந்த கோயில்ல போய் இந்தாளைப் பற்றி விசாரிக்கலாம்”

”கோகுல் ரொம்ப எக்ஸைடட் ஆவாதே. பொறுமையா இரு.

“டேய் வாடா..

ன்னை இழுத்துக் கொண்டு காரில் ஏறி கோயிலை நோக்கி வண்டியை செலுத்தினான். அவனை டென்ஷனாக்குவது போல ட்ராஃபிக்கும் அவனை தொல்லை செய்தது. வண்டியை கொஞ்சம் வேகமாகவே ஓட்டிச் சென்றான். நான் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. ஒரு திருப்பத்தில் வேகமாக வண்டியை திருப்பும்போது ஒருவரை இடித்து விட்டான்.

============================================================
============================================================

இடிபட்டவர் கையிலிருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. நல்லவேளையாக தலையில் எந்த அடியும் படவில்லை. ஆனால் அவர் மயங்கி விழுந்து விட்டார். கொஞ்சம் வயதானவராகவே இருந்தார். கையிலிருந்த பெட்டி தள்ளி விழுந்திருந்தது.

விபத்தை பார்த்து லேசாக கூட்டம் வேடிக்கை பார்த்தது. கோகுல் இருக்கும் அவசரத்தி விட்டு விட்டு போய்விடலாம் என்றான். நான் தான் கோபமாக அவனிடம் கத்தினேன். அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என சொன்னேன்.

அருகிலிருக்கும் ஒரு கிளினிக்கிற்கு அழைத்து சென்றோம். ஆனால் விபத்து என்பதால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சொல்லிவிட்டார்கள். நல்லவேளையாக அரசு மருத்துவமனைக்கு அருகில்தான் இருந்தோம். அவரை அங்கே அழைத்துச் சென்று சேர்த்து விட்டோம். அங்கிருந்து கிளம்பலாம் என்றால் அவருக்கு மயக்கம் தெளியவில்லை. டாக்டர் எங்களை இருக்கச் சொன்னார். கோகுல் என்னை இருக்க சொல்லிவிட்டு தான் மட்டும் அந்த ரமேஷை தேடிச் செல்வதாக சொல்லி விட்டு சென்றான்.



============================================================

நான் மருத்துவமனையில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். என்ன வாழ்க்கையிது? என் காதலியை தேடினேன். அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. இப்போதும் அவள் எங்கே என தெரியவில்லை. அவளைக் கூட தேடாமல் யாரையோ தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். நேற்றிரவு மகேஷ் பேசியது நினைவுக்கு வந்தது. வேறு ஏதோ பிரச்சினை வந்ததாக சொல்ல ஆரம்பித்தாரே அது என்னவாக இருக்கும்?

யோசித்து கொண்டிருந்த என்னை நர்ஸின் குரல் அழைத்தது. ஏதோ ஒரு மருந்து வாங்கி வரச் சொன்னார். மருந்தை வாங்கி கொண்டு வரும்போது ஒரு பெண் ஒரு சிறுவனுடன் நின்று கொண்டு வேறொரு நர்ஸிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தேன். அந்த பெண்ணை எங்கேயோ பார்த்தது போல் இருந்தது. எங்கே??? அவள் ஒரு வார்டுக்குள் சிறுவனுடன் நுழைவதை பார்த்தேன்.

யோசித்தபோது நினைவுக்கு வந்தது. அவள் ஷீலா. என்னுடன் காலேஜில் படித்தவள்தான். ஜோதிக்கு நல்ல நெருக்கமான தோழியாக இருந்தாள். ஆனால்  கல்லூரி இரண்டாம் ஆண்டு முடிவிலிருந்து அவள் கல்லூரிக்கு வரவில்லை. கொஞ்ச நாளில் தெரிந்தது. அவள் வீட்டருகே உள்ள யாரையோ காதலித்து ஓடி போய் விட்டாளாம். அதற்கப்புறம் அவளை இப்போதுதான் பார்க்கிறேன்.

அவள் எங்கே இங்கே? வாங்கி வந்த மருந்தை நர்ஸிடம் கொடுத்து விட்டு ஷீலா சென்ற வார்டுக்குள் சென்றேன். ஷீலா ஒரு படுக்கையில் படுத்திருந்தாள். அவளா நோயாளி?

“ஷீலா”

“ம்? யார் சார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்? என் பேர் எப்படி தெரியும்?”

“ஷீலா என்னை தெரியலை நான்தான் ஜெயந்த் காலேஜ்ல ஒன்னா படிச்சோமே”

============================================================

ஒரு பாடல்

வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்
உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்










ஷீலா என்னை அடையாளம் கண்டு கொண்டாள். அவளைப் பற்றி விசாரித்தேன்.. அந்த சிறுவன் பெயர் ஜெகன் அவளுடைய மகனாம். அவள் கணவன் பற்றி கேட்டதற்கு அமைதிதான் பதிலாக கிடைத்தது. ஆறுமாதம் முன்பு வரை சென்னையில்தான் இருந்திருக்கிறாள். அவளுக்கு ஏதோ வயிற்று வலியாம். அப்படியே பேசிக்கொண்டிருந்தோம்.

“நீ எங்க ஜெயந்த்?”

“ஒரு வேலை விசயமா வந்தேன்.”

ப்படியே பேச்சு நண்பர்கள் பற்றி சென்றது.. இவள் ஜோதிக்கு நெருக்கமாக இருந்தவள்தானே அவளைப் பற்றி கேட்டுப் பார்க்கலாமா?

“ஷீலா ஜோதி ஞாபகம் இருக்கா? அவளை அப்புறம் எங்கேயாவது பார்த்தியா?”

ஷீலா சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு சொன்னாள்....

“ம்ஹும். நான் சென்னையிலிருந்து திருச்சி வர காரணமே அவதானே!”

(தொடரும்)...